Saturday 22 January 2011

இயந்திர இதயங்கள்

சுந்தர பூமியென்று 
சுற்றிப் பார்க்கையிலே அதன்
அந்தரங்கம் கண்டு
அந்தரித்துப் போனேன்
விந்தையான மனிதர்கள்
சிந்தையெங்கும்  சின்னத்தனம்
நிந்தித்து மற்றவரை
நித்தமும் மகிழ்பவர்கள்
முதுகெலும்பு உள்ளதனை
முற்றிலும் மறந்தவர்கள்
பசுத்தோலைப் போர்த்திக் கொண்ட‌
பயங்கரமான நரிகள்
Add caption
அந்தரிக்கும் வேளையிலும்
அடைக்கலம் கொடுக்க‌
அகம் இல்லா உறவுகள்....
இன்னும் எத்தனையோ....
மூச்சு இரைக்குக்குதடா இவர்
மதியின்மை எண்ணுகையில்....
இதை சுவர்க்க பூமியென எண்ணி 
இன்னமும் எம் மண்ணில் காத்திருக்கும்
சகோதரனே சகோதரியே ...
அங்கு இருக்கும் வரையில் தான்
இங்கிருக்கும் உந்தன்
அண்ணனுக்கும் மாமனுக்கும் சித்தப்பனுக்கும்
அன்பான உறவு நீ...
அதையே பெரிதாக நம்பி
இங்கு வந்து விட்டால்....
நடுத்தெருவில் நின்றாலும் உன்னை
ஏனென்று கேட்க யாரும் வரார் 
ஏனென்றால்... அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல‌
அவர்களும் கூட‌ இங்கே
இயந்திரங்கள் தான்...

Monday 17 January 2011

பொங்கும் உணர்வு

தை திருநாள் வருமென்று காத்திருந்த போது‍_நெஞ்சை
தைக்கின்ற சேதி... நம் மண்ணில் அங்கே
பொங்கிப் பெருகுதையா மழை வெள்ளம்
பொசுங்கிப் போனதையா என் உள்ளம்

Christian aid agencies respond to global flood crises
இன்னும் ஏனோ துன்பமையா..
இனியும் நீழுமோ தொடர் கதையாய்
இறைவன் என்னினம் மீது
இரக்கம் பேண மறந்தானோ

ஆழிப்பேரலை அவலங்கள்
அதன் பின் வன்னித் துயரங்கள்
அடுத்து வெள்ளம் தொடர்கதையோ
அடுக்காய் துன்பம் நம்மவர்க்கோ

விடுப்பேன் இயற்கையே சவால் உனக்கு
விழுந்த போதெல்லாம் அழுதோம் தான்_ஆனால்
எழாமல் போனதில்லை.. உறைந்து போனதில்லை
எழுவோம் இனியும் புதுப் பொலிவாய்

பொங்கி எழுவது எம் உணர்வே
மங்கிப் போயிடும் பய உணர்வு
எங்கள் இனத்தை எது வந்து தாக்கிடினும்_மறு
திங்களில் எழுவோம் மறுபடி ஜொலிப்போம்