Monday 13 June 2011

ஊருக்குப் போறேன்...

ஊருக்குப் போறேன்...
ஊருக்குப் போறேன்..
விட்டு வந்த உயிரோடு மீண்டும்
ஒட்டி உறவாட
தொட்டிலிலே விட்டவளைக்
கட்டி அணைத்தாட
பார்த்து விழி பு+த்திருக்கும் பிஞ்சுகளில்
பாசம் பொழிவதற்கு... இன்னும்...
எத்தனையோ... எத்தனையோ....
எண்ணிலடங்கா ஏக்கங்கள்..
எப்படி இருக்கும் எங்களூர்...
இருபுறமும் அலைந்தாடும் உப்பு நீரிடையே
இப்போது திறந்த புதிய பாலம்...
நாகரீகம் புகுந்தும் புகாமலுமான
நடுத்தரப் பட்டினம்....
சிறிய ஓலைக் குடிசை..
சூழவுள்ள உறவுகள்....
கிணற்றடியில் நின்ற நிழல் மரவள்ளி....
வீட்டைச் சுற்றி நிற்கும் மாதுளை..
பரந்து விரிந்த மணற்றரை....
நான் உட்கார்ந்து மகிழும் திண்ணை....
நீண்ட தொடுகடல்....
ஆனாலும்... இன்னமும் அந்த..
சுடு குழல்களின் முன்னால்
சுதந்திரத்துக்காக கரமேந்தியபடி...