வடபகுதியில் போர் முடிந்து விட்டதா?
வடிவா பார்த்துச் சொல்லுங்கோ..
தொலைந்த போனது ஆயுதப் போர்தான்- ஆனால்
தொடங்கியிருப்பது என்ன?
வாழ்வுக்கும் சாவுக்குமான போர்..
வறுமைக்கும் வெழிப்புக்குமான போர்..
தனிமைக்கும் வெறுமைக்குமான போர்..
தாழ்வுக்கும் தரத்துக்குமான போர்..
விருப்புக்கும் வெறுப்புக்குமான போர்..
விரக்திக்கும் சினத்துக்குமான போர்..
சங்கீதா நிரஞ்சன் ஆயிரத்தில் ஒன்றாய்
சான்று சொல்லிச் சென்றவர்கள்...இன்னும் எத்தனை
சங்கீதாக்களும் நிரஞ்சன்களும் உண்டோ?...இவர்க்கு
சங்கூதக் காத்திருக்கும் உறவுகளுக்களிடம் ஒரு கேள்வி...
சாவின் பின் சங்கூதல் கடமையா -அவர்
சாவு வரை துடித்த போது நீரெல்லாம் எங்கு போனீர்?
காவு கொடுத்த பின் கண்ணீர் ஒரு கேடா?- அவர்க்கு
கரம் கொடுக்க மறந்தீரே உம் மேல்
காறி உமிழக் கூடாதோ?
ஐயகோ நெஞ்சு வெடிகுதே இந்த
அர்த்தமற்ற சாவுகளை நினைக்கையிலே-இவர்
யுத்தத்தில் வீழ்ந்திருக்கலாம் -இப்படி
சித்தம் சிதைந்து மாண்டதை விட...
மாமிசக் கண்களால் மட்டும் பார்த்து
மனக்கண்களைக் குருடாக்குவீரோ...
சாவுக்காய் முடிவெடுக்கும் வகையில்
அயலவன் நெஞ்சும் வயிறும் புகையும் போது..
சலனம் எதுவுமின்றி மனச்சாட்சியை பூட்டிவிட்டு
சாமிக்கு விளக்கேற்றி சாம்பிராணி புகைப்பீரோ?..
ஏனிந்த பாரா முகம்? ஏனிந்த வன்மம்?
எதற்கிந்த அலட்சியம்?
முள்ளிவாய்க்காலிலும் முல்லைத்தீவிலும்
மனித உடல்களையும் மட்டுமன்றி உம்
மனிதத்தையும் புதைத்தீரோ?
என் இனிய தமிழ் உறவுகளே...
என் ஆதங்கத்தால் வந்த சினம் பொறுப்பீர்...
அன்பும் ஆதரவும் உம் உறவுகட்கு நீர்தான்
அவர் வேதனைக்கு செவிசாய்க்க மாட்டீரோ?
அதிகம் ஒன்றும் வேண்டாம் கொஞ்சம்
ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தால் போதும்
அவர் தாமாகத் தம் துன்பம் வெல்வார்..
வடிவா பார்த்துச் சொல்லுங்கோ..
தொலைந்த போனது ஆயுதப் போர்தான்- ஆனால்
தொடங்கியிருப்பது என்ன?
வாழ்வுக்கும் சாவுக்குமான போர்..
வறுமைக்கும் வெழிப்புக்குமான போர்..
தனிமைக்கும் வெறுமைக்குமான போர்..
தாழ்வுக்கும் தரத்துக்குமான போர்..
விருப்புக்கும் வெறுப்புக்குமான போர்..
விரக்திக்கும் சினத்துக்குமான போர்..
சங்கீதா நிரஞ்சன் ஆயிரத்தில் ஒன்றாய்
சான்று சொல்லிச் சென்றவர்கள்...இன்னும் எத்தனை
சங்கீதாக்களும் நிரஞ்சன்களும் உண்டோ?...இவர்க்கு
சங்கூதக் காத்திருக்கும் உறவுகளுக்களிடம் ஒரு கேள்வி...
சாவின் பின் சங்கூதல் கடமையா -அவர்
சாவு வரை துடித்த போது நீரெல்லாம் எங்கு போனீர்?
காவு கொடுத்த பின் கண்ணீர் ஒரு கேடா?- அவர்க்கு
கரம் கொடுக்க மறந்தீரே உம் மேல்
காறி உமிழக் கூடாதோ?
ஐயகோ நெஞ்சு வெடிகுதே இந்த
அர்த்தமற்ற சாவுகளை நினைக்கையிலே-இவர்
யுத்தத்தில் வீழ்ந்திருக்கலாம் -இப்படி
சித்தம் சிதைந்து மாண்டதை விட...
மாமிசக் கண்களால் மட்டும் பார்த்து
மனக்கண்களைக் குருடாக்குவீரோ...
சாவுக்காய் முடிவெடுக்கும் வகையில்
அயலவன் நெஞ்சும் வயிறும் புகையும் போது..
சலனம் எதுவுமின்றி மனச்சாட்சியை பூட்டிவிட்டு
சாமிக்கு விளக்கேற்றி சாம்பிராணி புகைப்பீரோ?..
ஏனிந்த பாரா முகம்? ஏனிந்த வன்மம்?
எதற்கிந்த அலட்சியம்?
முள்ளிவாய்க்காலிலும் முல்லைத்தீவிலும்
மனித உடல்களையும் மட்டுமன்றி உம்
மனிதத்தையும் புதைத்தீரோ?
என் இனிய தமிழ் உறவுகளே...
என் ஆதங்கத்தால் வந்த சினம் பொறுப்பீர்...
அன்பும் ஆதரவும் உம் உறவுகட்கு நீர்தான்
அவர் வேதனைக்கு செவிசாய்க்க மாட்டீரோ?
அதிகம் ஒன்றும் வேண்டாம் கொஞ்சம்
ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்தால் போதும்
அவர் தாமாகத் தம் துன்பம் வெல்வார்..
Tweet | |||