Sunday 25 March 2012

நாமும் வேலைத்தளமும்- 3


முதல் பகுதி வாசிக்காதவங்க 

http://poonka.blogspot.co.uk/2012/03/1.html  நாமும் வேலைத்தளமும்- 1

 http://poonka.blogspot.co.uk/2012/03/2.html நாமும் வேலைத்தளமும்- 2


வாசியுங்க.. அப்போ தான் தொடர் புரியும்.

கஞ்சி குடிப்பதற்கிலார் பகுதி- 1


கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

எம்மில் பலருக்கு பெரும்பாலும் குழு மனப்பான்மை இல்லாமல் போய் விடுகிறது. தொழில் தளத்தில் நாம் ஒரு குடும்பம் போல செயற்பட வேண்டும். (இதை தப்பா புரிஞ்சுகொண்டு சக தொழிலாளியின் குடும்ப விசயத்தில் மூக்கை நுழைக்காதீங்கப்பா...). குழு மனப்பான்மை என்பது நாம் இணைந்து வேலை செய்பவர்கள் என்பதை எப்பொழுதும் நினைவிற் கொள்ளல்.
நீங்கள் எவ்வளவு முக்கியத்துவமான பணி செய்பவராக இருந்தாலும், அந்த தொழில் தளம் ஒவ்வொருவருடைய உழைப்பிலேயுமே இயங்குகிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
அடுத்தவரின் வேலையில் சிக்கல்கள், சுமைகள் ஏற்படும் போது முடிந்தால் (அது உங்களுக்கு தெரிந்த வேலையாக இருந்தால்) உதவி செய்யலாம். இது உங்களைப் பற்றிய நல்ல அபிப்பிராயத்தை மற்றவர்கள் மத்தியில் உருவாக்கும். இயன்ற வரை உங்கள் வேலையைப் பற்றி மட்டும் மற்றவர்களுடன் பேசுங்கள். மற்றவர்களுடைய வேலையைப் பற்றியோ அல்லது அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியோ அவர் அல்லாத இன்னொருவருடன் பேசுவதைத் தவிருங்கள். உங்களால் விமர்சிக்கப்படுகின்ற X,Y,Z என்ற நபர்களும் உங்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்து விடாதீர்கள். ஒற்றுமை உங்கள் குழுவிற்கு பலமாக இருக்கும்.
உங்கள் குழுவில் உள்ளவர்களின் சிறு சிறு குறைகளை பெரிது படுத்தாதீர்கள். முடிந்தால் அந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய உதவுங்கள். அல்லது அதை பொருட்படுத்தாமல் விட்டு விடுங்கள். சின்ன சின்ன பிரச்சனைகளையும் மேலதிகாரிகளிடம் முறையிடாதீர்கள். இச்செயல் உங்களை மன முதிர்ச்சி அற்றவராக மற்றவர்களை எண்ண வைக்கும்.
எனவே கடமை உணர்வு, குழு மனப்பான்மை என்பன நமது வேலைத்தளங்களில் நமக்கு இருக்க வேண்டிய முக்கியமான பண்புகளாக இருக்கின்றன.
இத்தனையும் நாம் கடைப்பிடித்தாலே  நாம் எமது வேலைத்தளத்தில் நல்ல சூழலை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது என் சிறிய மூளைக்கு எட்டிய கருத்து... நீங்க என்ன சொல்றீங்க???...(அப்பாடா... ஒரு மாதிரி இழுத்தடிச்சு.. முடிச்சிட்டன்)
-முற்றும்-


இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Sunday 18 March 2012

நாமும் வேலைத்தளமும் -2

முதல் பகுதி வாசிக்காதவங்க நாமும் வேலைத்தளமும்- 1

http://poonka.blogspot.co.uk/2012/03/1.html  வாசியுங்க.. அப்போ தான் தொடர் புரியும்.

கஞ்சி குடிப்பதற்கிலார் பகுதி- 1

கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

மேலதிகாரி உங்கள் விடயத்தில் தொடர்ச்சியாகப் பொறுமையோடு இருந்தால் சக பணியாளர்களின் மனநிலை மாறுபடும்...உங்களை மேலதிகாரிக்கு வேண்டப்பட்டவராக எண்ணும் அல்லது உணர்ந்து கொள்ளும் அவர்களில் ஒரு சிலர் உங்களை விட்டு விலக ஆரம்பிப்பார்கள். காரணமில்லாமலே உங்களோடு முரண்படுவார்கள். மேலதிகாரி உங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது அவர்களைக் குடைய ஆரம்பிக்கும். (ஏன் என்று யோசிக்கிறீர்களா?

Wednesday 14 March 2012

நாமும் வேலைத்தளமும்- 1


கஞ்சி குடிப்பதற்கிலார்...பகுதி 1
கஞ்சி குடிப்பதற்கிலார்-அதன்
காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்

பாரதியின் இந்த வார்த்தைகள் என்னைச் சிந்திக்கத் தூண்டின.
நம்மில் பலர் துன்பங்களை எதிர்நோக்குகின்ற எந்த வேளையிலும் அதற்கான காரணங்களை சிந்திக்காதவர்களாக மீண்டும் மீண்டும் அதே பிரச்சனைக்குள் வீழ்ந்த்திருக்கிறோம். இங்கே எழுதப்படுபவை உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்தவை தான். எனவே ஏற்கெனவே தெரிந்திருந்தும் அதை எடுத்து மீட்டிப் பார்க்காமல் இருப்பவர்களுக்கும், எனக்கும் கூட உபயோகப்படுமே என்ற ஆர்வத்தில் அதை எடுத்து தூசு தட்டும் முயற்சியே இந்த ஆக்கம்...

Friday 9 March 2012

புரியாத நண்பனுக்கு...


புரியாத நண்பனுக்கு...
புரியப்படாத.. நீ பிரியப்படாத தோழி எழுதுவது..
தரியாத வாழ்வில் உன் போல் சில
புரியாதோர் சந்திப்பு..என்
பரிசாய் கிடைக்கின்றன...
நான் பெற்ற வரம்..எங்கும்
நல்ல பெயர் பெற்றதில்லை
நாலுபேர் வாழ்த்தினால்
நாற்பது பேர் தூற்றுவர்-இதற்கு
நீ மட்டுமென்ன விதி விலக்கா?

Saturday 3 March 2012

காதலைப் பாடு..


கவியெழுத வேண்டுமென்று கையில் கோலெடுத்தேன்
கவித் தளங்கள் எங்கும் காதல் மணக்கிறதே!!!..
எனக்கும் ஒரு ஆசை....எழுத வேண்டும் காதல் கவிதை...
எத்தனை முயன்றாலும் எண்ணியது நடக்கவில்லை...
எரிச்சலுற்று எழுதுகோலை எட்ட வீசினேன்....
எண்ணும் கணத்தினிலே என்முன்னே அந்த
எழில் வதனன் மன்மதன் தோன்றினான்...

ஆகா அழகு... காதல் அழகு
அற்புத அழகு.. ஆனந்தக் களிப்பு
அப்படியே கிறங்கிப் போய்
அடுக்க முனைந்தேன் வரிகளை
அணுகுண்டாய் அதிர்ந்தான்..

நிறுத்து!!!...

பருவ வயதின் பாலினக் கவர்ச்சியாம்- காதலை
பாடி புகழத் தான் எத்தனைபேர்...
இருமனம் சேருவதும்.. இன்பக் கவி பாடுவதும்..
இதயங்கள் உணர்கின்ற பொதுவான காதல்..-அதைப்
பாடாது விட்டாலும்.. பள்ளி மாணவர் முதல்
பல் விழுந்த, பழுத்த பெரியோர் வரை
பலரும் உணர்ந்திடுவர்...எனவே
பேசாமல் விட்டுவிடு பெண்ணே...என்றான்

பின்னே எதைப் பாட??
பின்னின வார்த்தைகள்....

பெண்ணே பாடு... காதல் பாடு...
மண்ணில் கொண்ட காதலைப் பாடு..
மானம் மீதினில் காதலைப் பாடு...
உண்மை உணர்வு உள்ளத்தில் கொண்டு
உரமாய் வீழ்ந்தவர் காதலைப் பாடு...
எண்ணிய இலட்சியப் பாதையில் கொண்ட
எண்ணி லடங்கா காதலைப் பாடு..
விண்ணக இறைவன் காதலைப் பாடு..
விரிந்த மலர் மேல் காதலைப் பாடு...

பஞ்சு நாய்க் குட்டியின் மேல்
பிஞ்சுக் குழந்தையின் காதலைப் பாடு..
நெஞ்சம் கவர்ந்த மெல்லிசை மீது
கொஞ்சமும் மாறாக் காதலைப் பாடு...
செய்யும் தொழிலில் காதலைப் பாடு..
சிறந்த கல்வியில் காதலைப் பாடு...
பெய்யும் மழை மேல் காதலைப் பாடு...
புதுமைப் புரட்சியில் காதலைப் பாடு...

பாரினில் இத்தனை காதல் இருக்க..
பாலினக் காதல் மட்டும் தான் சுவைக்குமோ??..அவன்
வேகமாய் வீசிய ஏளன வார்த்தையால்
வெட்கி மெல்லத் தலை குனிந்திட்டேன்...