Showing posts with label அனங்கன் கவிதைகள். Show all posts
Showing posts with label அனங்கன் கவிதைகள். Show all posts

Friday, 28 February 2014

அம்மாவுக்கு பிறந்த நாள்

நீ பிறந்த நாள்
நான் மலர்ந்த நாள்
நான் பிறக்க நீ மலர்ந்தாய்
நீ பிறந்த நாளாகிய இன்று
நான் மலர்கிறேன்
முத்தான இந்நாளில்
முத்தாக நீ மலர்ந்தாய்
சிறிதான என் நெஞ்சில்
தாயெனும் இடம் பிடித்தாய்..

என் அம்மாவிற்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
-அனங்கன்

Monday, 4 February 2013

அன்பு - அனங்கன் குட்டி யாகவியுடன் இணந்து


அன்பு தாயிடம் உள்ளது
அன்பு தந்தையிடமும் உள்ளது
ஆசிரியரிடமும் அன்பு உள்ளது
இவர்கள் அனைவரும் இருப்பதால்தான்- நாம்
இவ்வளவாக வளர்ந்துள்ளோம்...
-அனங்கன் -


இந்த முறை கவிதை சுமாராகத்தான் எழுதியிருந்தான்.. ஆனால் முதலெழுத்துக்கள் ஒன்றிவர எழுதியிருந்தது அவன் கவிதையைப் பயிற்சி செய்கிரான் எனப் புரிய வைக்கிறது. அதோடு இன்னொரு ஆச்சரியம் கேளுங்க...அண்ணா கவிதை சொல்லுவதைக் கண்டதும் குட்டி யாகவிக்கு தானும் கவிதை ஒன்று சொல்லி அம்மாவிடம் பாராட்டு வாங்க வேண்டுமென்று ஆசை வந்து விட தானும் கவிதை சொல்லுகிறேன் என்று ஓடி வந்தாள்... அட.. ஐந்து வயதான இவளுக்கு எங்கே கவிதை வரப் போகிறது என்று எல்லோருக்கும் ஒரே சிரிப்பு... ஆனால் சொன்னா பாருங்க கவிதை... அப்படியே அம்மாவை (என்னைத் தானுங்க..) சந்தோசத்துல பறக்க வைச்சிட்டுது... நீங்களும் பாருங்களேன்....

கவிதையிலே நான் பிறந்து
கவிதையிலே நான் தவழ்ந்து
கவிதையிலே நான் வளர்ந்து 
கவிதையிலே என் அன்னையைத் 
திருப்தியாக்குவேன்...
-குட்டி யாகவி-













இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Sunday, 27 January 2013

தந்தை


ஏன் தாயை மட்டும் போற்றுகிறார்...
என் தந்தையும் ஒரு தாய் தானே-தாய்
பத்துமாதம் சுமந்து பெறுகையில்
உறுதுணையாய் இருந்தவர் தந்தை தானே...
நான் தாயை இகழ்ந்து பேசவில்லை...
இருவரும் நமக்கு பெற்றோர்தான்..

-அனங்கன்-


இது என் மகன் எழுதிய கவிதை...






இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

Sunday, 6 January 2013

இதயத்துடிப்பு


இறைவன் படைத்த ஆறே...

அதன் அழகிய நீரே என்

இதயத்துடிப்பை அறியமுடியவில்லையா

இறைவன் படைத்த மரமே அதன்

அழகிய முக்கனியே

என் இதயத் துடிப்பை அறிய முடியவில்லையா...

இறைவன் படைத்த பூமியே அதன்

மேலுள்ள வானமே

என் இதயத் துடிப்பை அறியமுடியவில்லையா

இவை எல்லாவற்றையும்

படைத்த இறைவா நீர்

என் இதயத்துடிப்பை அறிந்துள்ளீர்

இதற்காக உமக்கு ஸ்தோத்திரங்கள்....


(இது என் மகன் அனங்கன் -வயது 9 எழுதிய கவிதை.. குழந்தை கவிஞ்னாய் உருவாகும் அவனைப் பெருமையோடு அறிமுகம் செய்கிறேன்... )



இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!