Sunday 31 August 2008

இலக்கியம் பேசலாம் ...ஆனால்

அன்னிய நாட்டிலிருக்கும் 
என் உளமறியா உறவுக்கு..
அன்பான வணக்கங்கள்,
இந்த உறவு ஒரு எழுத்துலகின் உறவு
இதற்கு மேல் எதுவும் அல்ல...
நல்ல உறவுகள் நட்புக்கள் யாவும்
நயவஞ்சகத்தின் இன்னொரு முகங்கள்
நம்பி நின்றவர் அடிவாரும் அழுக்கு முகங்கள்
தேவை வந்திடத் தேடி வருவதும்
தீர்ந்ததும் திரும்பிப் பார்க்க மறப்பதும்
தாகம் என்றழத் தவிக்க விடுகின்ற
தயவற்ற உலகம்...
இவை வேண்டாம்... இனியும் உறவினை தேடுகின்ற
இம்சை எதுவும் வேண்டாம்
இலக்கியம் பேசலாம் இதயங்களை மூடிக்கொண்டு...
நன்றி

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!