Sunday 31 August 2008

இலக்கியம் பேசலாம் ...ஆனால்

அன்னிய நாட்டிலிருக்கும் 
என் உளமறியா உறவுக்கு..
அன்பான வணக்கங்கள்,
இந்த உறவு ஒரு எழுத்துலகின் உறவு
இதற்கு மேல் எதுவும் அல்ல...
நல்ல உறவுகள் நட்புக்கள் யாவும்
நயவஞ்சகத்தின் இன்னொரு முகங்கள்
நம்பி நின்றவர் அடிவாரும் அழுக்கு முகங்கள்
தேவை வந்திடத் தேடி வருவதும்
தீர்ந்ததும் திரும்பிப் பார்க்க மறப்பதும்
தாகம் என்றழத் தவிக்க விடுகின்ற
தயவற்ற உலகம்...
இவை வேண்டாம்... இனியும் உறவினை தேடுகின்ற
இம்சை எதுவும் வேண்டாம்
இலக்கியம் பேசலாம் இதயங்களை மூடிக்கொண்டு...
நன்றி

Thursday 28 August 2008

வரவேற்பீரா ???


வடித்த கவி மலர்கள்
வாடிப் போன பின்னர்
வழியிது கண்டேன்
வரையும் என் கவிவரிகள்
உரைக்கும் சேதியினை
உலகம் அறிவதற்காய்
வலைப் பின்னலூடாக
வந்தேன் உம் வையம் நாடி
வண்ணத் தமிழ் ஆர்வலரே
வரவேற்பீரா???