Monday 16 January 2012

பொங்கல்



எங்கும் ஆரவாரம் தங்குகின்ற திருநாள்
எங்கள் உழவர்களின் எக்காளத் திருநாள்
தங்கத் தமிழரொலாம் மகிழ்கின்ற திருநாள்
பொங்கும் உவகையுடன் பொங்குகின்ற திருநாள்

அங்கு இருந்த போது அப்படித் தான் பொங்கல்
அவளருகில் இருந்த போது அப்படித் தான் பொங்கல்
அன்னை மடியினிலே அப்படித் தான் பொங்கல்-அதற்கின்று
அத்தனை உறவுகளும் தொலைந்ததனால் தடங்கல்.

பானை ஏற்றிவிடும் அப்பன் இன்று இல்லை
பக்தியோடு தேவாரம் பாடத் தங்கை இல்லை
இலை விரித்துப் பொங்கலிட அன்னை இன்று இல்லை
இடை விடாது வெடி வெடடிக்கும் தம்பி கூட இல்லை

ஆதவன் எம் வாழ்க்கையிலே அஸ்த்தமித்து நாளாச்சு
ஆனந்தமாய் புதிர் எடுக்கும் காலமெல்லாம் போச்சு
பாதகரின் கரங்களிலே பசுமையெல்லாம் போச்சு
பாpதவித்து வேதனையால் விழி பொங்கலாச்சு

ஆனாலும் நம்பிக்கைத் தீ பரவலாச்சு
அடுப்பினிலே விரக்திகளைச் சுட்டரிக்கலாச்சு
தாழ்வற்ற தமிழனாக வாழ எழுந்தாச்சு
தளர்ந்தவர்க்குக் கரம் கொடுக்கும் உணர்வு பொங்கலாச்சு

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!