Monday 12 May 2014

வர்ணமும் வ(லி)ரிகளும்...

உருவக் குத்திய வாளோடும்
உயிர்வலியெடுப்பிலும்
உதிரச் சொரியலிலும்
உருவாகிய கனவுகள்
விடைபெற்றுக் கொள்கின்றன
வலியினை மட்டும் விட்டு விட்டு...

இருளிலிருந்து தூக்கப்பட்டு
கறுப்பு வர்ணத்தை மட்டுமே
வாழ்வின் பரிசாய் கொண்டு
வாழும் இதயங்களோடு இதயமாய்
துடித்துக் கொண்டு தான் இருக்கிறது
பிறந்து விட்டதற்கான தண்டனையாய்.... 

3 comments:

  1. கறுப்பு
    துக்கம், துயர அடையாளமுமல்ல
    வெள்ளை
    சுத்தம், சுக அடையாளமுமல்ல
    நிறங்கள்
    பார்வைக்கு அழகாக இருக்கட்டும்
    நிறங்களுக்கு
    பொருள் கற்பிக்க வேண்டாம்
    தன்னம்பிக்கை தான்
    எம் வலிகளைப் போக்கிட
    நல்ல மருந்து என்பேன்!

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி...

    தங்களது பதிவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்.
    நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள்.

    வலைச்சர இணைப்பு
    http://blogintamil.blogspot.ae/2014/10/blog-post_22.html

    நன்றி

    ReplyDelete
  3. வாழும் இதயங்களோடு இதயமாய் துடித்துக் கொண்டு தான் இருக்கிறது பிறந்து விட்டதற்கான தண்டனையாய்....

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!