Monday 26 October 2009

என் கௌரவம்

நண்பா....

வெளித்தோற்றம் தனைக்கண்டு
விமர்சிக்க நினைக்கிறாயா?
உடையணியும் தரம் கண்டு
உள்ளத்தை மதிப்பாயா?
நகையணியும் அளவு கொண்டு
நன்மனதைக் கணிப்பாயா?
தலை வாரும் அழகினிலே- என்
தகுதியினைக் காண்பாயா?
வார்த்தைகளின் இடையிடையே
வண்ணத் தமிழ் மறைத்து
ஆங்கிலம் பூசினால் தான்
வாழ்க்கையின் நாகரீகமா?
இத்தனையும் இல்லையென்றால்
இழிந்து பேசுமாம் சமூகம்
எனக்கென்று ஒரு
கௌரவத்தைப் பேணென்கிறாய்
என்னை நீ ஏற்பதற்காய்
என்னை ஏன் மாற்ற வேண்டும்...
என்னை நானாக ஏற்றுக்கொள்
அது தான் என்னுள்ளே விழித்திருக்கும்
அந்த 'நான்' னுக்கு நீயளிக்கும்
கௌரவம்

No comments:

Post a Comment

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!