Thursday 8 October 2009

தெரியுமா?? கேட்டுப்பார்!!!

மலர்களின் சுகந்தம் தெரியுமா 

வண்டுகளைக் கேட்டுப்பார்

மரணத்தின் சுவை தெரியுமா

வன்னிமண்ணைக் கேட்டுப்பார்

மகரந்தங்களின் மயக்கம் தெரியுமா

மலர்களிடம் கேட்டுப்பார்

மனித மாண்பின் பெறுமதி தெரியுமா

தெருவெங்கும் சிதறிக்கிடந்த

சடலங்களைக் கேட்டுப்பார்

விருந்தோம்பலின் மகிழ்ச்சி தெரியுமா

வினயமாய் உரைத்திட்ட

வள்ளுவனைக் கேட்டுப்பார்

வேதனையின் எல்லை தெரியுமா

வட்டுவாகல் வழி கடந்த

உறவுகளைக் கேட்டுப்பார்

விடுதலையின் தாகம் தெரியுமா

முட்கம்பிகளுன் முடங்கிப் போன

முகங்களிலே தேடிப்பார்.....



1 comment:


  1. /*
    மரணத்தின் சுவை தெரியுமா

    வன்னிமண்ணைக் கேட்டுப்பார்
    */


    உண்மை.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!