Tuesday 19 October 2010

அன்றும் இன்றும்....

அப்பொழுது நான் இறந்து போயிருந்தேன்
அவன் பார்வை எனக்குள் ஊடுருவும் வரை
அது கடந்து போன சுடுகாட்டு வாழ்க்கை
இறந்து பல வருடம்
புழுத்துப் போன எனக்குள்
ஊடுருவிய அவன் பார்வை
மாயக் கதிர் அலைகளாக
உயிரீந்து உணர்வீந்து உறவாடியது...
சுடுகாட்டின் காற்று தென்றலாகியது
மீண்டும் விதியின் விளையாட்டு
இப்பொழுது நான் இறந்து கொண்டிருக்கிறேன்..
அவனும் என்னோடு கூட
எதிர்கால சுடுகாட்டின் பயணம்...
எனக்கும் அவனுக்குமிடையே அந்தப் பிஞ்சு விரல்கள்....
பறந்து கொண்டிருக்கும் எம் உயிரின்
நுனியைப் பற்றியபடி....???

1 comment:

  1. எனக்கும் அவனுக்குமிடையே அந்தப் பிஞ்சு விரல்கள்....
    பறந்து கொண்டிருக்கும் எம் உயிரின்
    நுனியைப் பற்றியபடி....???

    மிக அழகிய பிடிமானம்.இனி நாளைய பயணத்தின் முடிவு சுடுகாடல்ல.சொர்க்காமாய் விரியும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!