Saturday 22 January 2011

இயந்திர இதயங்கள்

சுந்தர பூமியென்று 
சுற்றிப் பார்க்கையிலே அதன்
அந்தரங்கம் கண்டு
அந்தரித்துப் போனேன்
விந்தையான மனிதர்கள்
சிந்தையெங்கும்  சின்னத்தனம்
நிந்தித்து மற்றவரை
நித்தமும் மகிழ்பவர்கள்
முதுகெலும்பு உள்ளதனை
முற்றிலும் மறந்தவர்கள்
பசுத்தோலைப் போர்த்திக் கொண்ட‌
பயங்கரமான நரிகள்
Add caption
அந்தரிக்கும் வேளையிலும்
அடைக்கலம் கொடுக்க‌
அகம் இல்லா உறவுகள்....
இன்னும் எத்தனையோ....
மூச்சு இரைக்குக்குதடா இவர்
மதியின்மை எண்ணுகையில்....
இதை சுவர்க்க பூமியென எண்ணி 
இன்னமும் எம் மண்ணில் காத்திருக்கும்
சகோதரனே சகோதரியே ...
அங்கு இருக்கும் வரையில் தான்
இங்கிருக்கும் உந்தன்
அண்ணனுக்கும் மாமனுக்கும் சித்தப்பனுக்கும்
அன்பான உறவு நீ...
அதையே பெரிதாக நம்பி
இங்கு வந்து விட்டால்....
நடுத்தெருவில் நின்றாலும் உன்னை
ஏனென்று கேட்க யாரும் வரார் 
ஏனென்றால்... அவர்கள் வாழ்க்கை மட்டுமல்ல‌
அவர்களும் கூட‌ இங்கே
இயந்திரங்கள் தான்...

7 comments:

  1. என்ன அனுபவம் பேசுது

    ReplyDelete
  2. உண்மை தான் யாதவன்.... அனுபவங்கள் நமது ஆசான்கள்

    ReplyDelete
  3. அம்மாடி என்னவொரு தடித்த வார்த்தைகள்.. ஆனாலும் நிகழ்வுகளின் வீரியம் குறையாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதால் பாராட்டுக்கள் சகோ...

    ReplyDelete
  4. கவிதையின் நடை மிக அருமை..

    ReplyDelete
  5. வாழ்த்துக்களுக்கு நன்றி பாரதி சார்.. எப்பொழுதுமே உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது என் இயல்பு. அதுவே என் பலமும் பலவீனமும்..

    ReplyDelete
  6. உணர்வுகளை அப்படியே வெளிப்படுத்துவது என் இயல்பு. அதுவே என் பலமும் பலவீனமும்..

    பலமும் பலவீனமும் தெரிந்து கொண்டால் அவன் பூரண மனிதன் ஆகிவிடுவான்
    தங்களின் கவி நடை சூப்பர்

    ReplyDelete
  7. நன்றி ஃபர்ஹான். தொடர்ந்தும் என் தளத்திற்கு வரவேற்பதுடன் பின்னூட்டல்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!