Wednesday 10 August 2011

அய்யோடா....

என்ன கொடுமையடா நம்ம பிழைப்பு
அன்னை மண்ணில்தான்
குண்டு வெடிப்பு.. கந்தகப்புகை..
பஸ் நிறுத்தம்... போலீஸ் சுற்றி வளைப்பு...


உயிரைக் கையில் கொண்டு
ஓடி ஒழிந்து வந்து
அகதி நிலையினிலே அந்நிய நாடு வந்தால்...
இங்கேயும் கலவரமா....
பாவி போன இடம் எல்லாம்
பள்ளமும் திட்டியும் தானா...
மீண்டும் ஒரு முறை
கலவரம் உணர வைத்தார்
கறுப்பினச் சகோதரர்கள்...
அய்யோடா...

9 comments:

  1. நீங்கள் எப்படி சுகம் ஒரு பிரச்சனையும் இல்லையே

    ReplyDelete
  2. கொடுமையான விஷயம் தான்

    நீங்கள் இருக்கும் இடத்தில் அதிக பதற்றமா??

    நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  3. ஆமா... நான் இருக்கும் பிரதேசத்தை சுற்றி ஒரே புகை மண்டலம். அதிக பதற்றமாகத்தான் இருந்தது... ஆனால் ஆட்களுக்கு பிரச்சனை எதுவும் இல்லை.

    உங்கள் பிரார்த்தனைக்காக நன்றி ஆமினா..

    ReplyDelete
  4. வீட்டை விட்டு வெளியே வராத சூழலா? உங்களுக்காக எங்கள் பிரார்த்தனைகள் மேடம்

    ReplyDelete
  5. இப்போதுள்ள நிலைமையை அறிந்திட மனம் தவிக்கிறது.

    ReplyDelete
  6. இப்போழுது நிலைமை சீராகிவிட்டதா... நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  7. அக்கா நலம் எப்படி சிக்கல் ஒன்றும் இல்லையே... இப்ப நிலமை எப்படி ?

    ReplyDelete
  8. நலமுடன் வாழ பிராத்தனை செய்கிறோம்


    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  9. வணக்கம் சகோதரி இன்றுதான் உங்கள் தளத்திற்கு வந்தேன் .
    தேசப்பற்று நிறைந்த தங்களின் உணர்சிக் கவிதைகள் அருமை ...
    வாழ்த்துக்கள் மென்மேலும் உங்கள் ஆக்கங்கள் சிறப்புற .இதோ
    உங்கள் தளத்தில் இணைந்துவிட்டேன் உங்களையும் என் தளத்தில்
    இணைத்துக்கொண்டு எம் நட்பைத் தொடர விருப்பினால் தொடருங்கள் .
    இது என் மனதிற்கு மகிழ்வைத்தரும் என்றுகூறி விடைபெறுகின்றேன் .
    மீண்டும் அடுத்த ஆக்கத்தில் சந்திப்போம் .நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!