Thursday 27 December 2012

மௌனம்



மௌனம் உனக்குள் புகுந்தபின் தான்
அது அதன் வலிமை உணர்ந்தேன்...
அது என்னைத் தாக்கிய போது தான்
அதுவும் வலிக்கும் என உணர்ந்தேன்...
தாண்டமுடியவில்லை...
மதில்களையல்ல உன் மௌனத்தை...
தாங்க முடியவில்லை...
சுமைகளையல்ல.. இதயத்தை முட்களால் வருடும்
உன் மௌனத் தாக்குதல்களை..
தவறேதும் என்னில் இல்லைத் தான்...
ஆனால் உன் மௌனத்தைத்
தண்டனையாய் உணர்கிறேன்... எனக்கு
எதிராகவேனும் ஒரு வார்த்தை பேசிவிடு,,,
என் சிறையுடைப்பின் சுவாசத்தை
சுதந்திரமாய் உலவ விடு..






இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!

4 comments:

  1. கலக்குங்க

    ReplyDelete
  2. ///தாங்க முடியவில்லை...
    சுமைகளையல்ல.. இதயத்தை முட்களால் வருடும்
    உன் மௌனத் தாக்குதல்களை../// அருமை தொடருங்கள்.

    ReplyDelete
  3. @சக்கர கட்டி
    ////கலக்குங்க////நன்றி சக்கரைக் கட்டி, நான் கலக்கினால் நிங்க கரைஞ்சிட மாட்டிங்களா??? :) உங்க பெயரைச் சொன்னேன்....

    ReplyDelete
  4. @ Muhunthan Rajadurai//// வரவுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி முகுந்தன்... :)

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!