Wednesday 4 November 2009

உ(ன்)றவு

என்ன தவம் செய்தேனோ
எனதன்பு சகோதரனே...
உன்னையொரு தம்பியென
உலகினிலே கொண்டதற்கு
உடன் பிறவா உறவு நீ...
உண்மையான உறவும் நீ
அண்ணன் தம்பி இல்லையென்ற
குறை தீர்த்த சோதரனே...
ஒரு வயிற்றில் பிறக்கவில்லை
பரமன் எப்படி மறந்தான்...
இடம் மாறிப் புகுத்தி விட்டான்..
பரவாயில்லை... பந்தம் தொடர வேண்டும்
பாசம் மாறாத பசுமை வேண்டும்..
சுயநலமே இல்லாத உன்னன்பு..
வியக்கத் தோன்றுதடா..
பாசாங்கே இல்லாத
பாசம் பகிர்பவனே..
ஏமாற்றும் கலியுலகில்
எப்படி நீ இப்படி..?

இனியொரு பிறப்பிருந்தால்
ஒரே வயிற்றில் இல்லையென்றாலும்...
என் வயிற்றில் பிறந்து விடு.. உன்
பிஞ்சுக் கரம் பற்றி
விண்ணெங்கும் பறப்பதற்கு.....

1 comment:

  1. மனதை தொட்டுவிட்டது தொட்டுவிட்டது சந்தொசமாக உள்ளது

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!