Thursday 5 November 2009

இம்சை

கணவனைப் பிரிந்தேன் என்று
கண்ணீர் மல்கி நின்றாய்
துணைக்கு வந்த என்னைத்
துணைவனாய் வரிந்து கொண்டாய்
காந்த விழிகளாலே என்னைக்
கவர்ந்து லீலை செய்தாய்
முதன் முதல் உனக்குள்ளே
மோகத்தை வளர்த்து விட்டாய்
சங்கீதமாய் என்னுள்ளே
சஞ்சாரம் செய்து நின்றாய்
வனப்புடைய உன் மகனிற்கு
வளர்ப்புத் தந்தையாய்
வனைந்து கொண்டாய்
தீராத மோக மயக்கத்தில்
கிறங்கிப் போய் கிடந்த போது
தீர்மானமாய் சொல்லிச் சென்றாய்
திரும்பி வருவேனென்று-இன்று

தொ(ல்)லைபேசியில் உன்குரல்..
குழந்தையின் நலனுக்காய்
கணவனிடம் போகின்றேன்
இனி என்னை இம்சிக்காதே
இன்னொரு வழியைப் பார் என்கிறாய்
பெண்ணெ... இம்சையைத் தந்தது
நானா... நீயா...?
மெல்லவும் முடியாது உமிழவும் முடியாது
தொடைக்குளிக்குள்ளே துயரப் பந்தை
தந்து சென்றது நானா.. நீயா...??

2 comments:

  1. யாருக்கோ நடந்த உண்மை கதை

    ReplyDelete
  2. ஆம் உண்மை தான்...
    என் நெஞ்சைத் தொட்ட கதை...

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!