Thursday 5 November 2009

தமிழனாய் வாழுவோம்


வீதியில் கிடக்கத் தமிழா-நீ
வெறும் குப்பையல்ல
வதிவிடம் இன்றி வாழ
விதியென்ன உனக்கு
சாதி மத பேதம் எம்
சந்ததிக்கும் வேண்டாம்
சரித்திரத்தில் தமிழன் என்ற
இனம் ஒன்றே போதும்
போதி மரத்தவன் பேரனைத் திரும்பிப் பார்
பேதமை எம் பெருமை என்கிறான்
சாவதும் வாழ்வதும்
சகதியில் வீழ்வதும்
சனனித்த யாவருக்கும்
சமானமான நியதி
தளர்ந்து போனோம் என்று
உளம் நொந்து போகாதே
சாவினும் தமிழனாய் வாழுவோம் என
சபதம் எடுத்துக் கொள்
அந்நியன் காலடி இன்பத்தை
அருவெறுக்கக் கற்றுக் கொள்
அதுவே உன்னைத் தமிழனாய்
அவனியில் வாழ வைக்கும்

1 comment:

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!