Saturday 7 November 2009

வேண்டாம்...வேண்டாம்

பாலிய நினைவுகள் பசுமையானதென
பலர் சொல்லக் கேட்டதுண்டு
பொறாமைகூடப்பட்டதுண்டு
நானும் திரும்பிப் பார்த்தேன்-அங்கே
கற்களும் முட்களும் தந்த இரத்தக்
கறைபடிந்த பாதச்சுவடுகள்...
தேம்பலும் விம்மலுமாய்த்
தள்ளாடி நடந்த அந்த
தளர் நடைச் சுவடுகள்...
விழுந்து எழுந்த போதெல்லாம்
விட்டு வந்த அந்த
வேதனைச் சிதறல்கள்....
வேண்டாம் வேண்டாம்
பாலிய நினைவுகள் வேண்டாம்
புதைக்க விரும்புகிறேன் அந்த
புழுத்துப் போன பிணத்தை

3 comments:

  1. ஏனுங்க இப்படி?

    முதல் வாசிப்பே சோகமா?

    ReplyDelete
  2. மன்னிக்கவும் வசந்.. ரொம்ப ஏமாற்றமோ..
    எப்பொழுதும் இப்படியில்லை... அப்பப்போ..
    இன்னும் வரும் தொடர்ந்து வாசியுங்கள்

    ReplyDelete
  3. ஏன் இந்த கொலை வெறி

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!