Monday 16 November 2009

சங்கமம்..???

செல்லுலராய் நள்ளிரவில் என்னைப்பற்றி
செல்லமாய் செந்தூரமாய்
என் மீது உன் விரல்களின் நர்த்தனம்...
என் உணர்வு மெஸேஜ்களை
எழுத்து விடாமல்...
உற்றுப்படித்து இன்புற்று....
என் நரம்புகளில் றிங் ரோணை
மாற்றி மாற்றி மீட்டி மகிழ்ந்து....
உனக்குள்ளேயே என்கேஜ்
ஆகிக் கிடந்தேனே....
விடிந்ததும் கேட்கிறாய்
உனக்குள் எத்தனை மிஸ்கோள் என்று....
ஓ... நீ சங்கமித்தது
என் உடலோடு தானா....??

5 comments:

  1. கவிதை நன்றாக உள்ளது பூங்கோதை. பெண்களின் வலி தற்போது குறைந்துள்ளது ஆயினும் தீர வில்லை என தோன்றுகிறது.

    மோகன் குமார்

    ReplyDelete
  2. மிக நன்றாக இருக்கு பூங்குழலி...

    ReplyDelete
  3. /தோழி உங்களுக்கு என் பிளாக்கில் விருது வழங்கியிருக்கேன் வந்து பெற்றுக்கொள்ளவும்
    http://kalaisaral.blogspot.com/2009/11/blog-post_10.html/

    ஏந்தோழி இதை நீங்க பார்க்கவில்லையா????????????

    ReplyDelete
  4. மொபைலையும் உணர்வையும் இணைத்து கவிதை வடித்திருப்பது வார்த்தைகளில் வடிவமைத்த சுரீல்

    ReplyDelete
  5. கவிதையில் வலியுள்ள வரிகள் இறுதியில்.

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!