Thursday 12 November 2009

வில்லன்

உன் மென் சிரிப்பால் மெய்மறந்து
கண்கள் மயங்க....
உன் மென் ஸ்பரிசங்கள்...
உணர்வுக்குள் ஊடுருவி
உலுப்பி நிறுத்த...
நாளங்களின் அதிர்வுகள்
நாதங்களாக.... இன்ப சங்கீதமாக...
என் உதிரத்தை உன்
இதழ்களுக்கிடையே சுரக்க...
உயிருக்குள் இன்பமாய் வலிக்க..
தமிழ் சினிமாவில்
தந்தையே வில்லனாவது போல்....
நமக்கிடையேயும் ஒரு வில்லன்....
தட்டி உலுப்புகிறான்
“ஏய் ஊட்டிக் கொண்டே உறங்கி விடாதே...
பிள்ளைக்குப் புரைக்கேறும்..”
அது உன் அப்பா...

6 comments:

  1. தங்களின் கவிதைகள் அனைத்தும் அருமை, தாங்கள் விரும்பினால் தங்கள் படைப்புகளை எமது தமிழ்த்தோட்டத்தில் வெளியிட ஆவலாக இருக்கிறோம்...

    http://tamilparks.50webs.com

    ReplyDelete
  2. //என் உதிரத்தை உன்
    இதழ்களுக்கிடையே சுரக்க//

    ரசித்தேன் இவ்வரிகளை...

    //“ஏய் ஊட்டிக் கொண்டே உறங்கி விடாதே...
    பிள்ளைக்குப் புரைக்கேறும்..”
    அது உன் அப்பா...//

    கடைசியும் நல்லாருக்கு....நல்ல கவிதை...வாழ்த்துக்கள் தொடருங்கள்....

    ReplyDelete
  3. மேடம்! முதன் முறை வருகையிலே
    இன்ப அதிர்ச்சி!

    அருமையான பதிவு!

    -கேயார்

    ReplyDelete
  4. அற்புதமான பதிவு.. ம்ஹும்.. காட்சி மனக்கண்ணில் வருகிறது

    ReplyDelete
  5. அம்மாவுக்கு வில்லன் அப்பாவுக்கு வில்லன் . ஆனால் இருவரும்தான் உருவைகிய வில்லன் . வில்லங்கமான விரும்பத்தக்க வில்லன் . ஒரு தாயை கணவனுக்கு மனைவியாய் இருப்பது எவளவு கஷ்டம்

    ReplyDelete

இவ்வளவு தூரம் வந்திட்டீங்க... உங்க கருத்தைச் சொல்லாமல் போனால் எப்படி?... உங்க கருத்துக்கள் தானே என் எழுத்துக்கு உரம்.. !!!